• June 8, 2025

Month: June 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெண் கொலை; வீட்டில் பிணமாக கிடந்தார்

கோவில்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கார்த்திகா (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கொவில்பட்ட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.வீட்டினுள் போய் பார்த்தபோது கார்த்திகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டனர். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் […]

செய்திகள்

உயர் மருத்துவ சிகிச்சை: டி.ராஜேந்தர் இன்று இரவு அமெரிக்கா பயணம்

சினிமா டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டி.ராஜேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.ராஜேந்தரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்தன. விசா நடைமுறைகளும் முடிந்துள்ளன.இதையடுத்து டி.ராஜேந்தர் […]

செய்திகள்

பராமரிப்பு பணி: பழனி ரோப்கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக் கோவில் சென்று முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு கிரி வீதியில் அமைந்துள்ள ரோப் கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும்போது இயற்கை அழகை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர்; கிராம மக்கள் ஆச்சரியம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியேறினார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை நடத்தி வருகின்றனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளி கடை வைத்துள்ளார்.நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டர், விமானம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு அதிகம். அவற்றில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு பற்றி நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவான விவாதம்; ஒற்றை தலைமை கோரி,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]

செய்திகள்

மதுரை கவிஞரின் ‘தீண்டாதே தீயவை’ கவிதை நூல் அறிமுகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பசுமை நகரம் அல் அய்ன் ஆகும். இந்த நகரில் உள்ள அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரில் மதுரை கவிஞர் இரா.ரவி எழுதிய ‘தீண்டாதே தீயவை’ என்ற கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர் ஏ. முஹம்மது மஹ்ரூப் ‘தீண்டாதே தீயவை’ நூலை அறிமுகம் செய்து வெளியிட அல் அய்ன் இந்தியன் சோஷியல் செண்டரின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா பெற்றுக் கொண்டார்.அப்போது பேசிய ஏ. முஹம்மது […]

செய்திகள்

கசியும் ரகசியங்களால் செல்போனுக்கு தடை விதித்த அ.தி.மு.க.; கோபத்தில் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள்

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடக்கிறது,இது தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறதகூட்டத்தில் அ.தி.மு.க.வின் அவை தலைவரை தேர்வு செய்வது, பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், ஜனாதிபதி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், […]

செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணி `சாம்பியன்’

நேபாளம் தலைநகர் காட்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான மூன்று தொடர் டி20 போட்டி நடைபெற்றது.’இதில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று சாம்பியன் வெற்றிக் கோப்பையை பெற்றது. இத்தொடரின் சிறந்த மட்டையாளர் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதை காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த செய்யது ஷா அஜிஸ் பெற்றார். சிறந்த பந்துவீச்சாளர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த மணிவண்ணன் பெற்றார். […]

செய்திகள்

உடலில் பற்றி எரிந்த நெருப்புடன் கள்ளக்காதலியை கட்டிப்பிடித்த வாலிபர்

திண்டுக்கல் அடுத்த தவசிமடை அருகே உள்ள வாடிபட்டி காலனியை சேர்ந்த வாசிமலை என்பவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த சந்துரு (23). என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சந்துருவுடன் இருந்த பழக்கத்தை புவனேஸ்வரி தவிர்த்து வந்தார். இதனையடுத்து நேற்று புவனேஸ்வரி வீட்டிற்கு வந்த சந்துரு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் […]

செய்திகள்

மதுபாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள் விற்பனை; அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுகாதார அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் சுகாதார பிரிவினர் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அந்த கடையில் இருந்த குளிர்பானங்கள் காலாவதி ஆனதா? என ஆய்வு செய்த போது அங்கு மதுபாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள் இருந்ததை […]