சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- : தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானியங்களின் உற்பத்தி, பரப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்பொருட்டு தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்வதற்காக உழவு மேற்கொள்ள மானியமாக அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 40 சதவீதம் அல்லது ரூ.5400 பின்னேற்பு மானியமாக […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். விழா கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகள் […]
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த ஒருவர் கோர்ட்டு வாசலில் வெட்டிகொலை செய்யபப்ட்டார். பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர், ஏற்கனவே நடந்த ஒரு கொலைக்கு பழி வாங்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது,. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்/பி._. ஆல்பர்ட் ஜான் நேற்று ஆய்வு செய்தார்,. […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் இளம்பகவத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். குளத்தூர் ஊராட்சி, இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து ஆட்சியர் இளம்பகவத் காலை உணவு அருந்தினார்.. அங்கு மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். […]
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்தவர் தேன்பவானி (வயது 50), இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இரவு நேரங்களில் முத்தையாபுரம் பல்க் அருகேயுள்ள பிள்ளையார் கோவில் வாசலில் படுத்து தூங்குவாராம். வழக்கம் போல் நேற்று இரவு அங்கு தூங்கி இருக்கிறார். இன்று அதிகாலை மார்கழி மாத பூஜைக்காக கோவிலை திறக்க பூசாரி வந்தபோது, தேன்பவானி வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கபப்பட்டது, முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான மானியம் பெற தகுதியான விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க 2024-25ம் நிதியாண்டில் மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்குதல்” திட்டத்தின் […]
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள்கிழமை உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை […]
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது . டிசம்பர் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20.12.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆத்தூர் கஸ்பா, மேலாத்தூர், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், வடியவேல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகல் கவலையடைந்துள்ளனர். மழை வெள்ளத்தின் போது அடைக்கப்பட்ட போப்பாஞ்சான் வரப்பாஞ்சான் வடிகால் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இதனிடையே, வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து […]
தூத்துக்குடி 1-ம் கேட் முகமதுசாதலிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். மனைவி செல்லம்மாள் (82). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்லம்மாள் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாளின் உறவினர் பொன்ராஜ் (42) என்பவரை போலீசார் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
