• June 8, 2025

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ், வீலிங் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை; எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை

 கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸ், வீலிங் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை; எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில்  பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுவோர்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

விழா கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‘வீலிங்” செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு( எஸ்.பி.) ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *