• June 8, 2025

தேசிய விவசாயிகள் தினம்: விவசாய தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிப்பு

 தேசிய விவசாயிகள் தினம்: விவசாய தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிப்பு

தூத்துக்குடி – எட்டயாபுரம் ரோட்டில்,  கோவில்பட்டி

ஒய்எம்சிஏ  இயக்கத்தின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம்  கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ஒய்எம்சிஏ

தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  ஓய்வுபெற்ற  உதவி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார்.

ஒய்எம்சிஏ மண்டலத் துணைத் தலைவர் ரோஜர் அப்ரின் வரவேற்றார்.

தூத்துக்குடி – எட்டயாபுரம் ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் வேலைபார்க்கும் விவசாய தொழிலாளர்களுக்கு, சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..

ஜீ.கே.விநாயகா சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அருண்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஒய்எம்சிஏ செயலர் மேத்யூ நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை பிரின்ஸ் மோசஸ் செல்வன் , ஜான் சவுந்திர பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *