தூத்துக்குடியில் லோடுமேன் வெட்டிக்கொலை; கோவில் வாசலில் பிணமாக கிடந்தார்

 தூத்துக்குடியில் லோடுமேன் வெட்டிக்கொலை; கோவில் வாசலில் பிணமாக கிடந்தார்

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்தவர் தேன்பவானி (வயது 50), இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இரவு நேரங்களில் முத்தையாபுரம் பல்க் அருகேயுள்ள பிள்ளையார் கோவில் வாசலில் படுத்து தூங்குவாராம்.

வழக்கம் போல் நேற்று இரவு அங்கு தூங்கி இருக்கிறார். இன்று அதிகாலை மார்கழி மாத பூஜைக்காக கோவிலை திறக்க பூசாரி வந்தபோது, தேன்பவானி வெட்டிக் கொலை செய்யப்பட்டு  பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கபப்பட்டது, முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்தில கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்தையாபுரம் பகுதியில் ஓட்டலில் வேலை செய்யும் ஒருவருக்கும் தேன்பவானிக்கும் இடையே நேற்று இரவு மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட தேன்பவானிக்கு  மனைவியும், ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி ஏஎஸ்பி மதன் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *