சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது:-தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றது முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கபெறவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழக […]
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது.இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.இந்த திட்டம் […]
யுடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாமாக முன்வந்து கோர்ட்டு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளதஇந்த தீர்ப்பை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்று தெரிகிறது.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பேரறிஞர் அண்ணா அரசியலில் நாகரிகத்தை கடைப்பிடித்தவர். அண்ணா வழியிலே நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி இன்றைய விடியா தி.மு.க. அரசில் ஒரு பண்பாடு கிடையாது. அரசியல் நாகரீகம் கிடையாது. அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கவேண்டும். எதிர்க்கட்சிகளைப் புழுதிவாரி தூற்றவேண்டும்,என்ற அந்த நாகரீகமற்ற அரசியலை இன்றைக்கு தி.மு.க. எடுத்துச் செல்கிறது என்று சொன்னால், அண்ணாவிற்குச் சகிப்புத் தன்மை இருந்தது. ஜனநாயக ரீதியில் […]
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். […]
3 நாட்களாக போராட்டம்:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொழிலாளர்களுடன் நிர்வாகம் பேச்சு நடத்த நாம்
புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் த.இரமேசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-புதுச்சேரி மத்திய நிறுவனமான ஜிப்மர் நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 550 க்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள்கடந்த 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் மாதந்திர ஊதியத்திற்குரிய சம்பள ரசீது வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜிப்மர் நிர்வாகம் நடைமுறைபடுத்த வேண்டும் என்பன போன்ற […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த வக்கீல் மைக்கேல் பாரதி, அவரது ஜூனியர் வக்கீல் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக சென்று விட்டு சாத்தூர் திரும்பினர். காரை டிரைவர் அசோக் குமார் ஓட்டி வந்தார்.திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையின் சென்டர் மீடியனில் மோதி எதிர்ப்புறம் சாலையில் ஓடி உருண்டது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜூனியர் வக்கீல் […]
திருநெல்வேலி – பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை 4.50 மணிக்கு திருநெல்வேலி வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் சுமார் 5.15 மணி அளவில் பராமரிப்பு பணிக்காக ‘பிட்லைனுக்கு’ புறப்பட்டது.இதற்காக தச்சநல்லூர் வரை சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் மட்டும் கழற்றப்பட்டு, ரெயிலின் பின்புறம் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் பிட்லைனை நோக்கி ரெயில் சென்றது. அதிகாலை 5.30 மணி அளவில் பிட்லைனில் நுழைந்த பாலக்காடு ரேயிலின் கடைசி […]
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, நீட் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு (2022) 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். இதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 35 சதவீத தேர்ச்சியாகுமசென்னையில் தேர்வு […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
