இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்மேகம் சூழ்ந்த நிலையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தியாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனால் ரூ.100 கோடி வரை வருவாய் […]
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது; கோவில்பட்டி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன்
கோவில்பட்டி மத்திய ஒன்றியதிமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி,கிளைச் செயலாளர்கள் மகாராஜன்,கிருஷ்ணமூர்த்தி,முருகன்,வழக்கறிஞர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கீதாஜீவன்,தலைமைக் கழகப் பேச்சாளர் ராவணன்,தொகுதி பார்வையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். […]
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை குறிவைத்து அதிரடியாக பதில் தாக்குதல் தொடுத்தது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் […]
எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:- நான் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியதாக கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களை இந்தியா பொறுப்புடன் மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றி உள்ளது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான். இந்திய ஏவுகணைகள், ஆப்கானிஸ்தானை […]
நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் கடிதம்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட அக்கட்சி தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த தொகுதிகளில் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை அ.தி.மு.க. வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக 5 முறை போட்டியிட்டு 2 முறை படுதோல்வி அடைந்து அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில், ஆதரவில் வாக்குகளை பெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு […]
கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:- “இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை இன்று நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்றுள்ளது. துணை கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். டிரோன்களை நமது நாட்டுக்குள் […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில், பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்-அமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் […]
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே […]
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலாகா மாற்றம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் வகித்து வந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக, 2-வது இடத்தில் அமைச்சர் துரைமுருகன் இருந்து வருகிறார். தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் இருந்து வருகிறார். தமிழகத்தில் கனிம வள கொள்ளை பிரச்சினை […]
காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இரு வாரம் அமைதியாக இருந்த இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
