• May 14, 2025

இந்தியாவை நோக்கி நகரும் பாகிஸ்தான் படைகள்; பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய படைகள்- விங் கமாண்டர் வியோமிகா சிங்

 இந்தியாவை நோக்கி நகரும் பாகிஸ்தான் படைகள்; பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய படைகள்- விங் கமாண்டர் வியோமிகா சிங்

எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:-

நான் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியதாக கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களை இந்தியா பொறுப்புடன் மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றி உள்ளது.  

பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான். இந்திய ஏவுகணைகள், ஆப்கானிஸ்தானை நோக்கி ஏவப்பட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

கர்னல் சோபியா குரேஷி கூறியதாவது:-

பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. அது இந்தியாவின் ராணுவ தளங்களைத் தாக்க டிரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் 26 க்கும் மேற்பட்ட இடங்களில் வான் வழியாக ஊடுருவ முயன்றது,  உதம்பூர், பூஜ், பதான்கோட், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் உள்ள நமது உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை சேதப்படுத்தியது. அதிகாலை 1:40 மணிக்கு பஞ்சாபின் விமான தளத்தை குறிவைக்க அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. அவர்கள் சுகாதார கூடங்கள் மற்றும் பள்ளிகளையும் கூட தாக்கினர்.  

பாகிஸ்தான் வேண்டுமென்றே விமானப்படை தளங்களை குறிவைத்த பிறகு, இந்திய ஆயுதப்படைகள் விரைவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பதிலடி நடவடிக்கையை எடுத்தது. இதன்படி அதன் தொழில்நுட்ப நிறுவல்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் குறிவைக்கப்பட்டன.

ரபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் வான்வழி ஏவுதல், துல்லிய வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் குறிவைக்கப்பட்டன. பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமான தளமும் துல்லியமான வெடிமருந்துகளால் குறிவைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, பாகிஸ்தானின் குறைந்தபட்ச சேதம் மற்றும் இழப்புகளை இந்தியா உறுதி செய்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது:-

“விரைவான மற்றும் துல்லியமான பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானின் ராணுவ இலக்குகளில் மட்டுமே தாக்குதலை நடத்தின. இந்தியாவின்  S-400 அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமானநிலையங்களை அழித்ததாகவும் கூறி, பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தை செயல்படுத்த முயல்கிறது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது.

இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் படைகளை நகர்த்தி வருகிறது. இந்திய படைகள் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *