• June 8, 2025
கோவில்பட்டி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் 4 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கடலையூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஸ்டோர் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் வள்ளுவர் நகரைச சேர்ந்த சக்திவேல் (47), கூசாலிபட்டி சங்கரநாராயணன் (40), தெற்கு திட்டங்குளம் திராவிடசெல்வம் (59) கோவில்பட்டி லாயல்மில்காலனி ராஜபாண்டி (41) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.இதை […]

செய்திகள்

டாக்டர் பட்டம் பெற்ற பரமக்குடி மாணவருக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா.இந்த மாணவருக்கு சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.இளம் வயதில் கார் பற்றிய பல விஷயங்களை மிகவும் துல்லியமாக கூறி வருவதால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே ஆசியா புக் ஆப் ரிக்கார்டு , இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்டு ,தி […]

செய்திகள்

அவமதிப்பு புகார்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின வகுப்பை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதுமேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க […]

செய்திகள்

தி.மு.க.வில் இருந்து பில்லா ஜெகன் நீக்கம்

தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். இவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தை சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி. யின் அடுக்கடுக்கான கட்டளைகள்

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழிகாட்டல் – நெறிமுறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அடுக்கடுக்கான கட்டளைகள் பிரபித்து இருக்கிறார், அதன் விவரம் வருமாறு:- குற்றம் சாட்டப்பட்ட நபர்களை – சந்தேக நபரை அடிக்கவோ அல்லது சித்தரவதை செய்யவோ கூடாது. இதுகுறித்து அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மேல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனிப்படை (Special Team) போலீசார் கண்காணிக்கப்பட வேண்டும். *குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையம் தவிர லாட்ஜ்கள், […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் கன மழை

கோவில்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. கடந்த கோடை காலங்களை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பகல் நேரங்களில் பொது மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.பகல் நேரங்களில் வெளியே வருபவர்கள் அதிகம் பேர் இளநீர்,மோர், பழரசம், சர்பத், குளிர்பானங்கள் அருந்தி வெப்பத்தை தணித்தனர், இதனால் இது போன்ற கடைகளில் கூட்டம் அலைமோதியது.இறிப்பினும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் காரணமாக பொது மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று […]

கோவில்பட்டி

கோவில் கும்பாபிஷேக விழாவில் தீர்த்த குடம் சுமந்த கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தில் டில்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி பூஜையும், காப்பு கட்டுதல், கும்ப தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு கோவிலில் வலம் வந்து யாகசாலையில் வைக்கப்பட்டன,முன்னதாக ஒரு தீர்த்த குடத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, தலையில் சுமந்து வந்தார். அவருடைய மனைவி இந்திரா காந்தி உடன் வந்தார். இதனைத் […]

தூத்துக்குடி

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க போலீசார் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 13௦மீன்பிடி படகுகள் இன்று அதிகாலை கடலுக்கு சென்றன

கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு […]

செய்திகள்

தடைகாலம் முடிந்து மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள்; ராமேசுவரம் படகுகள் அதிக மீன்களுடன்

தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள், ஐஸ்பாக்ஸ், மீன்பிடி வலை, மீன்பிடி சாதனங்களை ஏற்றும் பணியிலும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 61 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்றுள்ளதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் […]