பள்ளிக்கு ரூ.30 லட்சம் செலவில் 5 வகுப்பறைகள் கட்டும் முன்னாள் மாணவர்கள்-கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று பலரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் கெச்சிலாபுரம் கிராம மக்கள் இணைந்து இந்த பள்ளிக்கு ரூ.30 லட்சம் செலவில் 5 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் கலந்து கொண்டு, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
