கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு அமர்ந்து தர்ணா
கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது மேஜை முன்பு ஐந்தாவது தூண் தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மனுதாரர்களின் சந்திப்பை தவிர்க்க வேண்டி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்காமல் பிற அலுவலர் அறையில் அமர்ந்து மனுதாரர் சந்திப்பை தவிர்த்து வருவதாக புகார் கூறி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக தெரிவித்தனர்,