3 நாட்களில் `விக்ரம்’ வசூல் ரூ.150 கோடியை தாண்டியது

 3 நாட்களில் `விக்ரம்’ வசூல் ரூ.150 கோடியை தாண்டியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது, 1986 ‘விக்ரம்’. இப்போது வந்திருக்கும் புதிய ‘விக்ரம்’ போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டது.
விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். ஜெயராமின் மகன் காளிதாசன், கமல்ஹாசனின் மகனாக வருகிறார். சந்தானபாரதி, செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சூர்யா, எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஒரே ஒரு காட்சி என்றாலும் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.
விக்ரம் படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாக தாண்டியது. வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது.
இண்டஸ்ட்ரி டிராக்கர் ஸ்ரீதர் பிள்ளை திங்களன்று டுவிட்டரில் விக்ரம் மூன்று நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஆரம்ப வார இறுதியில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என கூறி உள்ளார்.
ஆனால், படத்தின் இந்திப் பதிப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை. வர்த்தக ஆய்வாளர்களின் கூற்றுப்படி, படத்தின் இந்தி-டப்பிங் பதிப்பு முதல் மூன்று நாட்களில் ரூ. 2 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்று ஆரம்ப மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டு தமிழ்த் திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் இது அதிக வசூலாக இருந்தாலும், ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எப். 2 போன்ற பிற சமீபத்திய தென்னிந்திய படங்களை விட வசூலில் மிகவும் பின்தங்கியுள்ளது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *