அகில இந்திய ஆக்கி: அரை இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த கோவில்பட்டி அணி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.

இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, மும்பை யூனியன் வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி, கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி, புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி, செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி மற்றும் பெங்களூரு கனரா வங்கி ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
போட்டியின் ஏழாம் நாளான 29ம் தேதி (நேற்று )காலை 7 மணி அளவில் நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் மும்பை யூனியன் வங்கி அணியும் மோதின.
இதில் 5:2 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதின.
இதில் 3:2 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர்கள் மாரீஸ்வரன் சக்திவேல் 54வது நிமிடத்திலும் (பீல்டு கோல்), கார்த்தி 58வது நிமிடத்திலும் (பெனால்டி ஸ்டோக்), மற்றும் மணிகண்டன் 59வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) மொத்தம் 3 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி வீரர்கள் பரத் மஹாலிங்கப்பா 31வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) மற்றும் ஆனந்த் 60வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) தலா ஒரு கோல் அடித்து மொத்தம் 2 கோல்கள் அடித்தனர்.

பாலாஜி குமார் மற்றும் ராஜீவ் ரத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வீரர் மொஹித் குமாருக்கு வழங்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின.

இதில் 2:1 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர்கள் வில்சன் சேஸா 2வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்) மற்றும் மதியாஸ் டாங் 27வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 2 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.கோவில்பட்டி அணி அரை இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது
கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வீரர் மணிசங்கர் 11வது நிமிடத்தில் (பெனால்டி கார்னர்) முறையில் ஒரு கோல் அடித்தார்.

சரவணன் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர் மதியாஸ் டாங்குக்கு வழங்கப்பட்டது.
இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற நான்காவது காலிறுதி போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணியும் பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின.
இதில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு, அதில் 4:2 என்ற (மொத்தம் 5:3) கோல் கணக்கில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி வீரர் அகில் வெங்கட் நதிமிண்டி 8வது நிமிடத்தில் (பீல்டு கோல்) ஒரு கோல் அடித்தார்.
பெங்களூரு கனரா வங்கி அணி வீரர் லிக்ஹித் 27வது நிமிடத்தில் (பீல்டு கோல்) ஒரு கோல் அடித்தார்.
சுரேஷ் குமார் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி வீரர் அஜித் பாண்டேவு க்கு வழங்கப்பட்டது.
