• June 7, 2025

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாவட்டம் வாரியாக  அதிமுக பூத் கமிட்டி  கூட்டதை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி, அதிமுக பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக இன்று (மே 29) புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

நாளை (மே 30) திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களைவில் 6 பேர் பதவிக்காலம் முடிவடைவதை யோட்டி தேர்தல் ஆணையல் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கபப்ட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் இரண்டு மாநிலங்களை உறுப்பினர்கள் இடம் உள்ளது.

இன்று நடைபெறும்  கூட்டத்தில் மாநிலங்களவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளது. கூட்டணியைப் பற்றிய விவாதங்கள் மற்றும் பிரசாரத் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

]

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *