கோவில்பட்டி மாலையம்மன் கோவில் பொங்கல் விழா; பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்


கோவில்பட்டி மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 9-ம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. 20-ம் தேதி கொடை சாட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவு கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
விழாவின் 7-ம் நாளான இன்று பால்குட ஊர்வலம் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களை எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
29-ம் தேதி இரவு சுவாமி, அம்மன் திருக்கல்யாண வைபவம், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை வணிக வைசிய சங்கம் தலைவர் வெங்கடேஷ்,செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
