• June 6, 2025

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

 எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

கோவில்பட்டி, அருகே எட்டயபுரம் ராஜாமேல் நிலைப் பள்ளியில் 1999- 2000 வது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் இவர்கள் மாணவ பருவத்தில் படித்த பள்ளிக்கு குறிப்பிட்ட நாளில் படையெடுத்து வந்தனர்.

200க்கும் மேற் பட்டோர் 25 ஆண்டுக ளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு கலாச்சார கலை, நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன

மேலும் ஒவ்வொருவரும் தாங்கள் படித்த வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டு மாணவர்களாக மாறி பழைய நினைவுகளை அசை போட்டனர்.

முன்னாள் மாணவ மாணவிகள் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும் நடப்பாண்டில் அரசு தேர் வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாண வர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவித்தனர்..

கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொத்து கொடுத்து சால்வைகள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தனர். பின்னர் அவர்களிடம் ஆசியும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.

ராஜா மேல்நிலைப் பள்ளி செயலாளர் ராம்கு மார்ராஜா தலைமை தாங்கினார்.. பள்ளி தலைவர் ஜெயந்தி ராம்குமார் ராஜா முன்னிலை வகித்தார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், ஜெய்சங்கர் ஆகியோர் வரவேற்று பேசினர்.

.இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் சந்திரன், கற்பக ராஜா தலைமை ஆசிரியர் பழ னிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறிதியில் அனைவரும் குழு படம் எடுத்துக் கொண்டனர்..தங்கள் குடும்ப் உறுப்பினர்களையும் அழைத்து வந்தவர்கள் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *