கோவில்பட்டியில் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார்,
மாநில முன்னாள் பொதுச் செயலாளர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரவி, டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட துணை தலைவர் பூராணம், பிரச்சார செயலாளர் மாடசாமி, அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைகளை கோர்த்து நின்று மனித சங்கிலி உருவாக்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தின்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
*ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
*ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும்.
*1.4.2003-க்கு முன் பணியில் சேர்ந்து பின்னர் நிரந்தரம் பெற்றவர்கள், அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும்.
*குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
*தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
*பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறை உருவாக்கி, அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும்.
*தேர்தல் அறிக்கையின்படி, நடப்பில் உள்ள தொழிற்சங்க சட்டங்களை நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊழியர்சம்பளம் வழங்க வேண்டும்.
*பணி நிரவல் ஏபிசி சுழற்சி முறை இடமாறுதல் வழங்க வேண்டும்
