• June 6, 2025

குற்றாலம் பகுதியில் பலத்த மழை; அருவிகளில் வெள்ளம்

 குற்றாலம் பகுதியில் பலத்த மழை; அருவிகளில் வெள்ளம்

தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. மேலும் பகல் நேரங்களில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று முந்தினம இரவு தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குறிக்க போலீசார் நேற்று தடை விதித்தனர். மழையின் வேகம் குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தபின் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *