விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் வழங்கிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

கோவில்பட்டியைச் சேர்ந்த பாலகுரு எனபவரின் மகன் சண்முகராஜா (வயது 21) . இவர் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மதுரையில் இருந்து சிவகங்கை சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சண்முகராஜா இறந்து போனார்.
.சண்முகராஜா ஏற்கனவே தனது வாகனத்தோடு சேர்த்து தனக்கும் ரூ.275 செலுத்தி ரூ.15 லட்சம் மதிப்புள்ள கட்டாய தனிநபர் விபத்து காப்பீட்டை கோவில்பட்டி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளையில் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அவர் இறந்ததற்கான ஆவணங்களை குடும்பத்தினர் சமர்ப்பித்த 10 நாட்களுக்குள் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை மண்டல மேலாளர் பி.சுடலைமணி, கிளை மேலாளர் ஏகணேசமூர்த்தி, நிர்வாக அளி முகவர் .யோபுதாஸ்கென்ட் ஆகியோர் இறந்த சண்முகராஜாவின் தந்தை பாலகுருவிடம் ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
