தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க புதிய செயலாளர், இணை செயலாளர் தேர்வு

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. சங்க தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். பொருளாளர் என்.ராஜவேல் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்,
கூட்டம் தொடங்கியது, முன்னாள் செயலாளர் தேவதாஸ் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் புதிய செயலாளராக வரதராஜன், இணை செயலாளராக .தினேஷ் (தனலட்சுமி மேச் ஒர்க்ஸ்) ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து இருவருக்கும் போப் தி கிங் மேச் பாக்டரி ஆர்.கருப்பசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தீப்பெட்டி நூற்றாண்டு விழாவை , சிவகாசி சேம்பருடன் இணைந்து சிறப்பாக நடத்துவது.என்று தீர்மானிக்கபப்ட்டது.
சிகரெட் லைட்டர்கள் இந்தியா முழுவதும் இறக்குமதி செய்யவும் உபயோகிப்பதையும் தடை செய்ய நடவடிக்கைகள் எடுத்து வரும் தவிஜய் ஆனந்த், .நாகராஜன், .பிலால் பாய், பரமசிவம், கோபால், லட்சுமணன் ஆகியோரின் பணி சிறக்க நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் சங்க மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில் ஜெ..ராஜ்குமார் நன்றி கூறினார்.
