தூத்துக்குடி மாவட்ட திட்டப்பணிகள்: அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13077 கோடி மதிப்பீட்டில் 1320 மெகாவாட் (2 x 660 MW) அனல்மின் நிலையப் பணிகள், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்கும் பணிகளில், சாலை வசதி மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவுற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் தண்ணீர் விநியோகத்திற்கான பணிகள் பற்றி முதல் அமைச்சர் கேட்டறிந்தார்.,
ஓட்டப்பிடாரம் வட்டம், தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக பணியின் நிலை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியினை நீராதாரமாகக் கொண்டு ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, பற்றி அதிகாரிகள் விளக்கி கூறினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.306 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வரும், பணிகளை விரைந்து முடித்திட முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய நாட்களில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி. கீதா ஜீவன் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
