இளையரசனேந்தல் குறுவட்ட விவசாயிகளுக்கு மானியம்

இளையரசனேந்தல் வேளாண்மை உதவி அலுவலர் த.திருவேணி
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_
இன்று 31-ந்தேதி காலை 11 மணிக்கு கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது .
எனவே விவசாயிகள் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து முன்பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் -1
ரேஷன் கார்டு ஜெராக்ஸ் – 1
பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -1
பட்டா – 2 1/2 ஏக்கருக்கு -1
வங்கி கணக்கு எண் : 1
போட்டோ -1
அடங்கல் -1
மேலும் விவரங்களுக்கு 8760802713 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
