• June 7, 2025

தீப வழிபாடு பலன்கள்

 தீப வழிபாடு பலன்கள்

தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைக தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது.

கோலமிடப்பட்ட வாசலில் 5 தின்ணைகளில் 4,, மாடக்குழிகளில் 2, நிலைப்படியில் 2, நடைகளில்  2, முற்றத்தில் 4 .பூஜையறையில் : 2 விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் : எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம் தீபத்தை பலவகைகள் உண்டு. அவை

வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

அடுக்கடுக்கான தீப தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

 வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ஆகாச தீபம் ஆகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

தீபத்தை ஏற்றி நதிநீரில் மிதக்க விடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

 கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்க விடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.

வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை சர்வ தீபம் ஆகும்.

முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபம் ஆகும்.

அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டு பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *