தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை

 தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளகண்ணு (26). இவர் இன்று காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் சாலையில் நடந்த சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களில்  வந்த 4பேர் கொண்ட அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.’;இந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் சம்பவ இடத்திலயே ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த வெள்ளகண்ணு ரத்த வெள்ளத்தில் பிணமானார்,

இதை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து மொட்டார்சைகில்களில் தப்பி சென்று விட்டனர், இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர், அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை..

இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளகண்ணு உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து  கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *