கோவில்பட்டி தொகுதியில் 2 இடங்களில் புதிய பேவர் பிளாக் சாலை

கோவில்பட்டி அருகே காமராஜர் நகர்,இபி காலனி, அன்பு கார்டன் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 5.40 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் மதிப்பில் கழிவு நீர் வாறுகால் ஆகியவற்றை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ,இளைஞர் இளம்பெண்கள் மாவட்ட செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,கலை இலக்கியப் பிரிவு மாவட்ட அணி செயலாளர் போடுசாமி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,
மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்யா, மகளிர் அணி பத்மாவதி, பிரபா,தீபா, உள்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து.கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5.66 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புதிய டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
