பாதாள செம்பு முருகன் கோவிலில் இயக்குனர் வசந்த், சாமி தரிசனம்

ரிதம், ஆசை, நேருக்கு நேர், கேளடி கண்மணி, பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் வசந்த்.
தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் வசந்த், மனைவி சம்யுக்தா உடன், திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் ராமலிங்கம்ப்பட்டி போகர் நகர் பாதாள செம்பு முருகன் கோவிலில் கருங்காலி மாலைகள் சாற்றி தரிசனம் செய்தார்.
அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது,”ஆருத்ரா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ சார்பில் புதிய படத்தை இயக்க உள்ளேன். அதனால் முருகனின் ஆசி பெற வந்தேன்” என்று தெரிவித்தார்.
