தூத்துக்குடி பக்கில் ஓடை முகதுவாரத்தில் தூர்வாரும் பணி; மேயர் ஜெகன் பெரியசாமி தொடக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் நிலைகளை சீரமைக்க மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்திற்கு சுமார் 35 அடி நீளம் கொண்ட கையுடன் ராட்சத கிட்டாட்சி (PC210) வாடகையில்லா இயந்திரத்தை(கொமாட்சூ ) எக்ஸ்னோரா அமைபினர் வழங்கியுள்ளனர்.
மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த ராட்சத ‘கிட்டாட்சி’ மூலம் பக்கில் ஓடை மற்றும் திரேஸ்புரம் முகத்துவாரத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே.கென்னடி முன்னிலை வகித்தார்.
