‘கை’ யோடு ‘கை’ கோர்ப்போம் வாகன பேரணி; சென்னையில் தொடக்கம்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘கை’ யோடு ‘கை’ கோர்ப்போம் என்ற வாகன பேரணி நடத்தப்படுகிறது.
இந்த வாகன பயணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று தொடக்கி வைத்தார்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, தளபதி பாஸ்கர், இனாமுல் ஹசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..