கோவில்பட்டியில் அ.தி.முக. கண்டன ஆர்ப்பாட்டம்
பட்டியலின மாணவி மீது வன்கொடுமை, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவைகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன,
கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் எதிர்புறம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .அதிமுக,வை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரண்டு வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தனி மேடை அமைக்கப்பட்டு அதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர், திமுக அரசை கண்டித்து கூடி இருந்தவர்கள் கோஷம் எழுப்பினார்கள். முடிவில் கடம்பூர் ராஜு சிறப்புரை ஆற்றினார்.