தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டியில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாசில்தார் அலுவலகம் அருகே இருந்து தலைகவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாக விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி, வாகன விற்பனை பிரதிநிதிகள். ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி,முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிந்தது.
பேரணியின்போது வழிநெடுக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பேரணி முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.