கோவில்பட்டியில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை
கோவில்பட்டியில் இன்று காலையில் இருந்தே வெப்ப நிலை மாறி இருந்தது. வானத்தில் மேகம் சூழ்ந்து மழைக்கான அறிகுறியை காண்பித்தது,
காலை 9 மணி அளவில் திடீரென கன மழை பெய்யதொடங்கியது. ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.
மழை காரணமாக கோவில்பட்டி நகரில் மழை நீர் அதிகம் தேங்கவில்லை. இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாலத்தில் மட்டும் தண்ணீர் தேங்கியது.
குறைந்த அளவு தண்ணீர் சேரும் வரை வாகனங்கள் அந்த வழியாக சென்று வந்தன, பின்னர் கன ரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மழை ஓய்ந்து சில மணி நேரங்களில் அந்த பாலத்தில் தேங்கிய மழை நீர் வடிந்து விட்டது. அதன்பிறகு வழக்கமான போக்குவரத்து தொடங்கியது.
20 நாட்களுக்கு மேல் வெயில் அடித்து வந்த நிலையில் இந்த மழையானது பருத்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்றும் இந்த மழை உற்சாகத்தை தூண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.