• May 20, 2024

கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம்

 கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம் மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கோபாலகிருஷ்ணன் , இணைச் செயலாளர் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் கற்பூரராஜ் , ஜெகன் மோகன், மாநில பிரதிநிதி வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

*தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபபட்டது.  

*மொழிவாரி சிறுபான்மையினர் சான்றிதழ் முறையாகவும் காலதாமதம் இன்றி வழங்க வேண்டி கொடுக்கப்பட்ட மனுவிற்கு முறையான பதில் வரப்பெறவில்லை மேலும் அதற்கு முறையான பதில் வழங்க வேண்டி அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கவும் மற்றும் மேல் நடவடிக்கைகள் எடுக்கவும் அறப் போராட்டம் / ஆர்ப்பாட்டம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

*யுகாதி திருநாள் கொண்டாடாவும் மேலும் இந்த நிகழ்வில் சுயம்வரம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

*செயல்படாத முறையாக கூட்டத்திற்கு வராத  மண்டல அளவிலான நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது.

*பாலவிஷ்ணு என்பவரை புதிதாக மண்டல அளவில் இளைஞரணிக்கு நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *