கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம் மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கோபாலகிருஷ்ணன் , இணைச் செயலாளர் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் கற்பூரராஜ் , ஜெகன் மோகன், மாநில பிரதிநிதி வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
*தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபபட்டது.
*மொழிவாரி சிறுபான்மையினர் சான்றிதழ் முறையாகவும் காலதாமதம் இன்றி வழங்க வேண்டி கொடுக்கப்பட்ட மனுவிற்கு முறையான பதில் வரப்பெறவில்லை மேலும் அதற்கு முறையான பதில் வழங்க வேண்டி அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கவும் மற்றும் மேல் நடவடிக்கைகள் எடுக்கவும் அறப் போராட்டம் / ஆர்ப்பாட்டம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
*யுகாதி திருநாள் கொண்டாடாவும் மேலும் இந்த நிகழ்வில் சுயம்வரம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
*செயல்படாத முறையாக கூட்டத்திற்கு வராத மண்டல அளவிலான நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது.
*பாலவிஷ்ணு என்பவரை புதிதாக மண்டல அளவில் இளைஞரணிக்கு நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.