செய்தித்தாள் வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்ட மாணவர்கள்
செய்திதாள்களின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜனவரி 29ம் தேதி இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். மேனாள் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன்,பள்ளி தலைமையாசிரியர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி கிளப் மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் ஆசியாபார்ம்ஸ் பாபு மாணவர்களுக்கு தினசரி செய்தித்தாள்களை வழங்கினார். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் பள்ளி மாணவி காவ்யாஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் மாணவர் அமர்நாத் நன்றி கூறினார்.