கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடு: மேற்கு போலீசுக்கு பாராட்டு
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி கோவில்பட்டி பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காலை முதல் மாலை வரை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக இருந்தது. எனினும் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு எதுவும் இல்லை. இதே போல் நகர் முழுவதும் போக்குவரத்து சீராக இருந்தது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த துணை கண்காணிப்பளர் வெங்கடேஷ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிக்கண்ணன், செந்தில், ராஜேந்திரன் மற்றும் போலீசாரை கோவில்பட்டி தேவர் சிலை பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறுப்பாளர் ஆறுமுக பாண்டியன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.