சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு பரிசுகள்; ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டத்தில்.ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியில் இன்று 1.11.23 நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபதி கலந்து கொண்டார்.
சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கினார்..மேலும் நன்கு செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவான குமாரபுரம் பரணி மகளிர் சுய உதவிக்கழுவிற்க்கு பரிசு வழங்கினார். கிராம சபையில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை அரங்கினை ஆட்சியர் .லட்சுமிபதி பார்வையிட்டார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்.அ.பிரம்மசக்தி ,திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை(பொ) வீரபுத்திரன் ,நட்டாத்தி ஊராட்சி மன்ற தலைவர் .சுதா கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்,