இஸ்ரேல் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம், பகத்சிங் இரத்ததானக் கழக அறக்கட்டளை இணைந்து கோவில்பட்டியில் இன்று இஸ்ரேல் போரைக் கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச் செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார் மற்றும் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் தலைவர் மா.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்& கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி முருகன் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, கலைச்செல்வன், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், ஐஎன்டியுசி ராஜசேகரன், தொழிலதிபர் மதன்ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாடசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பொன்ஶ்ரீராம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் ஜாஹிர் உசேன், அமிர்தராஜ், பாண்டியனார் மக்கள் இயக்கம் ஜோயல், ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை, மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து, இரட்டைமலை சீனிவாசன் பேரவை செல்வக்குமார், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் மாணிக்கராஜ், இஸ்லாமிய நண்பர்கள் அமைப்பின் காஜா மைதீன், முகமது அலி, ஜெய்லானி, கமர்தீன், மற்றும் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் லட்சுமணன், மணிகண்டன், வேல்முருகன், வெள்ளப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.