• May 20, 2024

தூத்துக்குடியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 25 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

 தூத்துக்குடியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 25 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

ஓ. பன்னீர்செல்வம் அணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவராக இருந்தவர் கே.சரவணன், இவர் தலைமையில் புருனோ, சாஹீர், அசாருதின், அஜ்ய், பரத், ரியாஸ், பவாஸ், மணி, கிரிஷ், பிரவீன், விஜய் உள்ளிட்ட 25 பேர் ஓ.பி.எஸ்.அணியில் இருந்து விலகி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் தலைமையேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட அதிமுக செயலாரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தாய் கழகமான அ.தி.மு.க.வில் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டனர்.  

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், திருச்சிற்றம்பலம், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, யுவன்பாலா ஆகியோர் உடன் இருந்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளரும் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் செய்திருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *