• May 20, 2024

அரிவாள் முனையில் வழிப்பறி செய்தவர் சிக்கினார்

 அரிவாள் முனையில் வழிப்பறி செய்தவர் சிக்கினார்

கோவில்பட்டி: ராஜபாளையம் அழகாபுரியை சேர்ந்த கண்ணன் மகன் முருகராஜ் (வயது41). டெய்லர். இவர் மனைவியுடன் கோவில்பட்டி காந்திநகர் அத்தைகொண்டான் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒருவாலிபர் வழி மறித்தார். அரிவாளை காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டார்.. முருகராஜ் பணம் தர மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், முருகராஜை தாக்கியதுடன்  சட்டை பையில் இருந்த 1௦௦௦ ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டாராம். இதில் காயம் அடைந்த முருகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

வழிப்பறி சம்பவம்  குறித்த புகாரின்பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி செய்த காந்தி நகரை சேர்ந்த சங்கிலிப்பாண்டி மகன் கணேச மூர்த்தி (23) என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.



Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *