• May 20, 2024

பகத்சிங் பிறந்தநாள்: இளைஞர் பெருமன்றத்தினர் உறுதிமொழி ஏற்பு

 பகத்சிங் பிறந்தநாள்: இளைஞர் பெருமன்றத்தினர் உறுதிமொழி ஏற்பு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவில்பட்டி நகர குழு சார்பில் மாவீரன் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய திருநாட்டைபாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இளைஞர் பெருமன்றம் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், தாலுகா செயலாளர் மணி, நகர தலைவர் ரஞ்சனி கண்ணம்மா உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்பில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் ஜி.,பாபு.,மாவட்ட குழு பரமராஜ், பஞ்சாலை செயலாளர் குருசாமி, பொருளாளர் ராஜி, நகர துணை செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்  உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *