• May 20, 2024

தருவைக்குளம் – வெள்ளபட்டி சாலையில் ரூ.7 கோடி செலவில் உயர்மட்ட பாலம்; அடிக்கல் நாட்டு விழா  

 தருவைக்குளம் – வெள்ளபட்டி சாலையில் ரூ.7 கோடி செலவில் உயர்மட்ட பாலம்; அடிக்கல் நாட்டு விழா  

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தருவைக்குளம் – வெள்ளபட்டி சாலையில் உள்ள தரை மட்ட பாலமனாது, மழைக்காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. மழைகாலங்களில் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடும். இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால்  தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினரின்  தீவிர நடவடிக்கையின் காரணமாக தற்போது ரூ, 7 கோடியே  86 ஆயிரம் செலவில் உயர்மட்ட பாலம் அமைக்க வழிவகை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்..

இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் .சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் .ராம்ராஜ், உதவி பொறியாளர்.காயத்ரி வருவாய் ஆய்வாளர்.சுகுணா, ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா , கிராம நிர்வாக அலுவலர் .மாரிமுத்து, தருவைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் காடோடி, கீழஅரசடி ஊராட்சி மன்ற தலைவர் ராயப்பன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *