• May 20, 2024

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா; 3-ந்தேதி நடக்கிறது

 கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா; 3-ந்தேதி நடக்கிறது

கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்றைய தினம்  காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்ப லக்கனத்தில் வருடாபிஷேகம் நடக்கிறது.

முன்னதாக காலை 6 மணிக்கு அனுக்சை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், பரிவாரமூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம். அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூரணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கள் நடைபெறும். பூஜைகளை தூத்துக்குடி செல்வம் பட்டர் நடத்தி கொடுக்கிறார். நண்பகல் 12 மணி அளவில் கோவில் எதிர்புறம் உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கில் அன்னதானம் நடைபெறும்.

இரவு 7 மணி அளவில் கோவில் சித்திரை திருவிழா முதல்நாள் மண்டகபடிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கறி வியாபாரிகள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகங்கத்தில் வெள்ளிகுடையின் கீழ் பத்திரகாளி அம்மன் அமர்ந்து திருவீதி உலா வருதல் நடக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *