கோவில்பட்டியில் மாவட்ட சிலம்பம் போட்டி

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் கோவில்பட்டியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் போட்டி நடைபெற்றது. எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், டி.சி.எஸ்.ஜே. ஜூனியர் கிளப் தலைவர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க சட்ட ஆலோசகர் ரெங்கராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், மகளிர் அணி கோமதி மற்றும் பா.ஜ.க. தொழிற்துறை பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் சோலைநாராயணசாமி செய்திருந்தார்.
