• May 17, 2024

கோவில்பட்டியில் மாநில யோகாசன போட்டி; கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்

 கோவில்பட்டியில் மாநில யோகாசன போட்டி; கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார்

தமிழ் கல்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கலை, அறிவியல் கல்லூரியில் இன்று 26-ந் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொதுசெயலாளர் எம்.மாரியப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் எஸ்.கண்ணன், கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ், தமிழ் கல்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் அழகுதுரை, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியை கல்லூரி தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தொடக்கி வைத்தார். போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  யோகாசன போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப்பள்ளி, மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் பள்ளி, கயத்தாறு  மதர் தெரசா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகள் பெற்றன.

சாம்பியன் இரண்டாம் இடத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் வேங்கடசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி, விஜயகரிசல் குளம் மகாத்மா காந்தி நரசரி பள்ளி, கோவில்பட்டி லட்சுமி மில் மெட்ரிக்பள்ளி ஆகியவை பெற்றன.

சாம்பியன் மூன்றாம் இடத்தை கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி, சாத்தூர் பாரத் நர்சரி பள்ளி, புதியம்புத்தூர் எம்,என்.யு.பி.நரசரி பள்ளி ஆகியவை பெற்றன. பெரம்பலூர் பாரத் பர்ஸ்ட் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் சேஷா பள்ளி உள்பட 10 பள்ளிகள் சிறப்பிடம் பெற்றன.

வெற்றி பெற்ற பள்ளிகூட அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. சுழற்கோப்பை மற்றும் கேடயம் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

தொடக்கத்தில் டிரஸ்ட் செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் சிவசக்திவேல் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *