கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து மேல் முறையீடு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ஏ.கே. மாறன், மாவட்ட செயலாளர் துரைராஜ், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் திருப்பதிராஜா, உமாசங்கர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பொது செயலாளர்கள் சண்முகராஜா, ஐ.என்.டி.யு.சி. ராஜாசேகரன், எஸ்.எம்.டி. ராஜா,முத்து,மாவட்ட செயலாளர் ஜோஷ்வா,sc/st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் கண்ணாயிரம்முத்து, நகர தலைவர் நேதாஜி காளிதாஸ், மணிக்கொடி, மாவட்ட சிறுபான்மையினரின் பிரிவு தலைவர் அருள்தாஸ்,வட்டார காங்கிரஸ் சுந்தர் ராஜ் நகரசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
