• May 20, 2024

கி. ரா. நினைவு மண்டபத்தில் இலக்கிய சொற்பொழிவு

 கி. ரா. நினைவு மண்டபத்தில் இலக்கிய சொற்பொழிவு

கரிசல் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கி.ரா.நினைவு மணி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கிளை தலைவர் அமலபுஷ்பம் தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர். ராஜகோபால் முன்னிலை வகித்தார்.


எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய என் வகுப்பறை கதைகள் என்ற நூலினை சாகித்திய அகடமி விருது பெற்ற சோ .தர்மன் வெளியிட்ட்டு இலக்கிய சொற்பொழிவுரையாற்றினார் . வெளியிடப்பட்ட நூலினை கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீதா மகேஸ்வரி பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை ஏற்புரை நிகழ்த்தினார். ஊடகவியலாளர் பத்திரிகையாளர் சுவாமிநாதன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியபாலன், கலை இலக்கிய பெருமன்றம் பாலமுருகன் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராசாமணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செயலாளர் வேலுச்சாமி, திரைப்பட இயக்குனர் வரதன் செல்லப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியினை மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.நிர்வாக கிளை பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *