• May 20, 2024

பா. ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 பா. ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட sc/st பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மத்தியில் ஆளும் பா. ஜனதா அரசை கண்டித்தும் பழங்குடி சமுதாயம் என்பதால் இந்திய நாட்டின் குடியரசு தலைவர் முர்மு வை அழைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், மற்றும் துரை ராஜ், காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில் sc/st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்
மேலும் pcc உறுப்பினர் திருப்பதி ராஜா, intuc ராஜா சேகரன், ஜோஷ்வா, sc/st பிரிவு நகர தலைவர் நேதாஜி காளிதாஸ், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் மரியவினோ, பழனிசாமி, முருகன், மகேந்திரன்,வேலசாமி, சண்முகவேல், கோபால், பிச்சைக்கனி,பாலமுருகன், சக்தி கிரண் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *