• May 20, 2024

அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்ட அறிமுக விழா; தூத்துக்குடியில் 30-ந்தேதி நடக்கிறது

 அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்ட அறிமுக விழா; தூத்துக்குடியில் 30-ந்தேதி நடக்கிறது

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்தும் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்ட அறிமுக விழா கலெக்டர் அலுவலக முத்து அரங்கத்தில் 3௦-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 10 மணிக்கு நடக்கிறது.

,மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்குகிறார். தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சொர்ணலதா திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் நாணயம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுமையம் உதவி இயக்குனர் பேச்சியம்மாள், திருநெல்வேலி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உதவி இயக்குனர் ஜெரினா பபி , தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்  இசக்கிமுத்து, தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் கண்ணன்,  தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலகுழு உறுப்பினர் காளிமுத்து, சீட்ஸ் ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் சிவா, ஏ.சி.டி.ஐ;வி. ஒருங்கிணைப்பாளர்  மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

விழா தொடக்கத்தில் தொழில் மைய உதவி இயக்குனர் அகிலா வரவேற்று பேசுகிறார். முடிவில் உதவி பொறியாளர்(தொழில்கள்) ராஜேஷ் நன்றி கூறுகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *