கோவில்பட்டியில் நேரு நினைவுதின அஞ்சலி

இந்திய திருநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது, கோவில்பட்டி காந்திமண்டப வளாகத்தில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் சி. காளிதாஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேரு உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண் பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் .ராஜசேகரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் .துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேற்கு வட்டார துணைத் தலைவர் .காமராஜ், ஐ.என்.டி.யு.சி,. மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்டட காங்கிரஸ் கமிட்டி மகேந்திரன், கவிஞர் சிவபெருமாள், மற்றும் மாவட்ட, வட்டார, துணை அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்,. மாரிமுத்து நன்றி கூறினார்.
