• May 20, 2024

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

 கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

 கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில் கூறியதாவது:-

 நேர்மையாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர், அவர் அலுவலகத்தில் இருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் யாரும் தனியாக இருக்க முடியாத நிலை, பெண் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இது தான் தமிழகத்;தின் நிலைமை. இது குறித்து தான் சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்தார்.

கிராமத்தினை பாதுகாக்க வேண்டிய அதிகாரிக்கு இன்றைக்கு பாதுகாப்பு இல்லை, தனது கடமையை செய்ததற்கு பரிசு தான் மரணம், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் என்பது மக்களின் மனதில் வந்துவிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதனை மனதில் வைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *