பா.ஜனதா மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் =பிரதமர் மோடியின் மனதில் குரல் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. எராளமான கட்சி தொண்டர்கள் கூடி இருந்து பிரதமரின் பேச்சை கவனித்தனர்,
மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பாக கிராமப்புற, நகர்ப்புற முன்னேற்ற கள ஆய்வு குழுவின் மாவட்ட, மண்டல நிர்வ்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமை தாங்கினர். மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி ,சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்,
தொடர்ந்து பூத் வலிமைப்படுத்தும் இயக்கத்தில் உள்ள மாவட்ட, மண்டல அளவில் உள்ள நிர்வாகிகளுக்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு மாவட்ட போதுசெயலளர்கள் வேல்ராஜா, ஆத்திராஜ்,, சமூல ஊடக பிரிவு மாநில செயலாளர் ஜீவாகண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்